ஸ்டாலின் பேரதிர்ச்சி! சென்னை மேயர் பதவியை கேட்கும் திருமா!

 
ச்ட்

சென்னை மாநகராட்சி மேயராக உதயநிதி ஸ்டாலின் வரப்போகிறார்,  கனிமொழி வரப்போகிறார் என்று பரபரப்பு ஏற்பட்டு அடங்கிய நிலையில்,  பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்குத்தான் சென்னை மேயர் பொறுப்பு என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

இதையடுத்து ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருக்கும்,  அதுவும் சென்னையைப் பொறுத்த வரைக்கும் ஸ்டாலினுக்கு மிகவும் பக்கபலமாக இருக்கும் பி.கே. சேகர்பாபுவும்,  மா. சுப்பிரமணியனும் ஆளுக்கு ஒரு பெண்ணை தங்கள் தரப்பில்  சிபாரிசு செய்து இருக்கிறார்கள்.   இதை தவிர கட்சியின் சீனியர்கள் பலரும் மேயர்  சென்னை மேயர் பதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ப்க்

 இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சென்னை மேயர் பதவியை தங்கள் கட்சியைச் சார்ந்த பெண்ணுக்கு தரும்படி முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைக்க,  அவர் அதிர்ச்சியாகி இருக்கிறார்.   அதைக் கேட்ட பி.கே .சேகர்பாபுவும்,  மா.சுவும் பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியதால்  கூட்டணி கட்சி தலைவர்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து சொல்லி வருகின்றனர். அந்த வகையில் ஸ்டாலினிடம் வாழ்த்து சொல்ல  சென்ற திருமாவளவன்,   சென்னை மாநகராட்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர்கள் 6 பேர் போட்டியிட்ட நிலையில் 4 பேர் வெற்றி பெற்ற வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  அதில் ஒருவரான சாந்தி என்கிற யாழினியை  சென்னை மாநகராட்சியின் மேயர் பொறுப்புக்கு பரிந்துரை செய்தால் விடுதலை சிறுத்தைகள் என்றென்றும் திமுகவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று உருக்கமுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ய

 இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஸ்டாலின்,  திமுக அமைச்சர்களிடம் திருமாவளவன் சொன்னதை சொல்ல,  அதைக்கேட்டு திமுகவின் சீனியர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.  சேகர்பாபு,  மாசு ரெண்டு பேரும்  பேரதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 

ய

சட்டென்று  உணர்ச்சிவசப்பட்ட சேகர்பாபு,   மேயர் பதவி திமுகவுக்குத் தான்.   அதை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது.   சென்னை மாநகராட்சியை பட்டியலின பெண்களுக்கு கொடுத்தது திமுகவின் வரலாற்று புரட்சி.  அந்தப் புரட்சியை திமுக மேயர்தான் செயல்படுத்த வேண்டும் என்று சொன்னதைக் கேட்டு,  அது தான் சரி என்கிற மாதிரியே ஸ்டாலினும் தலையசைத்து இருக்கிறாராம்.