நான் தவித்து போல் ஸ்டாலினும் தவிக்கிறார் -நாராயணசாமி

 
n

 நான் எப்படி புதுச்சேரியில் தவித்தேனோ அதே போல் தான் தமிழகத்திலும் முதல்வர் ஸ்டாலின் தவிக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

 திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர், இந்திய அரசின் மெத்தனப்போக்கு,  அலட்சியத்தின் காரணமாக இந்திய மாணவர்கள் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.   இந்த செயலுக்கு பிரதமர் மோடியின் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.   படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருக்கும் மாணவர்களின் நலன் கருதி இந்திய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் படிப்பைத் தொடர மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார் .

sm

தொடர்ந்து பேசிய நாராயணசாமி ,   தமிழக முதல்வரும் ,  பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பி உக்ரைனில் இருந்து மாணவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருக்கிறார்.   நீட் தேர்வினை  மோடி அரசு கொண்டு வந்ததால்தான் இது போன்ற சூழல் நிலவுகிறது . நடுத்தர மக்களின் மாணவர்களுக்கு மருத்துவ கனவு பலிக்காமல் போனதற்கு காரணம் மோடி அரசுதான் என்றார். 

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.  கூட்டணி தர்மத்தை காக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஸ்டாலின் செய்த செயலுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

 புதுச்சேரியில்  ஆளுநர் மற்றும் மோடியால், பாஜகவினரால் நான் எப்படி கஷ்டப்பட்டேனோ, அப்படித்தான் ஆளுநர் , மோடி , தமிழக பாஜக தலைவர்கள் தலையீட்டால் தமிழக முதல்வர் ஸ்டாலின் தவித்து வருகிறார்.  இதற்கெல்லாம் விடிவு காலம் விரைவில் வரும்.   தற்போது மோடிக்கு எதிராக திரண்டிருக்கிறது தமிழகம்.  ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மத்திய அரசை எதிர்த்து பல்வேறு  போராட்டம் நடத்தி வருவது ஒரு நல்ல முன்னுதாரணம்.  இது பாராளுமன்றத் தேர்தலுக்கு மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும் என்றார்.