காமராஜரைப் போல் முழு நல்லவர் ஸ்டாலின் -நெல்லைக்கண்ணன்

 
னெ

குழந்தைகளை ஆறு வயதிற்குள் பள்ளிக்கு அனுப்ப  வேண்டாம்.  வயதிற்கு மேல் தான் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று  உத்தரவிட வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு நெல்லைக்கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 நெல்லை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் ஐந்தாவது புத்தகத்திருவிழா நடந்து வருகிறது.   கடந்த 17ம் தேதி தொடங்கிய இந்த புத்தக திருவிழா  27ஆம் தேதி இன்று வரைக்கும் நடைபெற இருக்கிறது.   

 நெல்லை கண்ணன் இந்த புத்தக விழாவின் கருத்தரங்கில் பங்கேற்று பேசினார்.   அப்போது,   ’’எல்லாம் நல்லவர்களையும் பார்த்தாச்சு...’’என்றவர்,   ’’காமராஜரைப் போல் முழு நல்லவனாக உருவாக்கிக் கொண்டிருக்கிறவர் ஸ்டாலின்’’என்றார்.

னெ

 தொடர்ந்து பேசிய நெல்லை கண்ணன்,  ‘’முதல்வர் ஸ்டாலின் கூடவே இருந்து அவரை ஆதரித்து அவர் கூடவே இருக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஒரு நல்ல முதலமைச்சர்.  நிறைய முயற்சி செய்து இருக்கிறார்.   அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோள்.   தமிழகத்தின் குழந்தைகள் ஆறு வயதிற்குள் பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்ற உத்தரவை அவர் பிறப்பிக்க வேண்டும்.   குழந்தைகளை பாதுகாத்து தாருங்கள்.    நமது எதிர்காலச் செல்வங்கள் அவர்களை இந்த பள்ளிக்கூடங்கள் முளையிலேயே கருக்கிவிடும்’’என்றார்.

’’புத்தகக் காட்சி என்ற வார்த்தையை முதலில் எதிர்த்தவன் நான்.   அதற்கு காரணம் புத்தகம் என்பதே வடமொழி.   படைப்பாளிகள் சங்கமும் என்று அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்.   புத்தகத்திருவிழாவில் புத்தகத்தை வாங்க வேண்டும் . எது தேவையோ அதை படிக்க வேண்டும்’’ என்று கூறினார்.