’’நாஞ்சில் சம்பத்துக்கு நரம்பு மண்டல பிரச்சினை.. மன நல பாதிப்பு...’’

 
na

 அதிமுக தலைவர்கள் பற்றி அநாகரீகமாக பேசி வருவதாக சொல்லி நஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.  

 அதிமுகவின் சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும் முன்னாள் எம்எல்ஏவுமான இன்பதுரை  தமிழ்நாடு தலைமை காவல் துறை அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் நாஞ்சில்சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.   இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   சென்னை சேப்பாக்கத்தில் திமுகவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதல்வரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று  பேசிய நாஞ்சில் சம்பத் அதிமுக தலைவர்கள் , அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பற்றி அவதூறு செய்யும் நோக்கில் உள்நோக்கத்தோடு அநாகரிகமாக பேசியிருக்கிறார்.   அது சட்டப்படி தவறு. 

n

 கடந்த 2017ஆம் ஆண்டு பல்லாவரம் காவல் நிலையத்தில் நாஞ்சில் சம்பத்தின் மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.  தற்போது நாஞ்சில் சம்பத் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.   அதில், அரசியல் தலைவர்களை அநாகரிகமாக பேசியது தொடர்பாக நாஞ்சில் சம்பத் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற அவதூறாக எவரையும் பேசமாட்டேன் என உறுதி அளித்து நீதிமன்றத்தில் வாதிட்டு இருக்கிறார்.

 தற்போது வழக்கு நிலுவையில் இருக்கிறது.    இந்த நிலையில் இது போன்ற அநாகரிகமான முறையில் இனி பேசுவதில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு,  உறுதி மொழிக்கு எதிராக தற்போது நடந்து கொண்டிருக்கிறார்  என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,   2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் திடீரென மூளையில் உள்ள நரம்பு மண்டல பாதிப்பு காரணமாக நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நாஞ்சில் சம்பத்,  பின்னர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.   தற்போது அவர் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது அவருக்கு நரம்பு மண்டல பிரச்சனையும் மனநலம் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. அதனால்தான் நீதிமன்றத்தில் நாஞ்சில்சம்பத் ஏற்கனவே அளித்துள்ள உறுதிமொழிகளை மறந்து அநாகரீகமான முறையில் மேடையில் பேசி வருகின்றார் என்றார்.