ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசவில்லை - ஈவிகேஎஸ் இளங்கோவன் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி

 
e

ஜெயலலிதா குறித்த அவதூறு வழக்கில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான வழக்கினை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.   இவர் கடந்த 2016ஆம் ஆண்டில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசியபோது,   அப்போதைய தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். 

ev

 முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது அப்போது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.   இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது .

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது.   அப்போது ஜெயலலிதா குறித்து அவதூறாக எதுவும் பேசவில்லை என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தரப்பில் வாதிடப்பட்டது.  இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.