இத செஞ்சுட்டா புனிதராகிவிடுவாரா?சமூகநீதி லட்சணம் இதுதானா? டிடிவி தினகரன் விளாசல்

 
ttv

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதிப் பெயரைச் சொல்லி  இழிவாக பேசியதால் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.   பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ். எஸ். சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் . 

b

 அமைச்சரின் இந்த இழிவான செயலுக்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிடிஓ ராஜேந்திரன் கண்ணீர் விட்டார்.  இதையடுத்து முதலமைச்சர் அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சராக ராஜகண்ணப்பன் பதவி ஏற்ற நாள் முதலாகவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. கட்சியினரிடையேயும் ராஜகண்ணப்பன் சலசலப்புகள் சர்ச்சைகளையும் அவ்வப்போது ஏற்படுத்தி வந்துள்ளார் .  இந்நிலையில் சாதி விவகாரத்தில் அவர் துறை மாற்றம் செய்யப்பட்டிருப்பதால்,  தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? 'எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா? என்று கேட்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.   

ra

சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்?!  என்று கடுமையாக விளாசும் தினகரன், ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா?  என்று கேட்கிறார்.