சசிகலா பக்கம் சாய்கிறாரா வெல்லமண்டி நடராஜன்?

 
v

திருச்சி மாநகராட்சியை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்திருக்கும் நிலையில் வெல்லமண்டி நடராஜன் மட்டும் அவரின் சந்திப்பை தவிர்த்திருப்பதால்  அவர் சசிகலா பக்கம் சாய்கிறாரா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது அதிமுக தலைமைக்கு .   

e

 திருச்சி மாநகராட்சி புறநகர் தெற்கு மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர்கள் ,  திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமாருடன் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியும் தனது ஆதரவாளர்களுடன்  சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.   ஆனால் வெல்லமண்டி நடராஜன் மட்டும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க  போகவில்லை.   அதனால் அவர் சசிகலா பக்கம் போகிறாரா என்ற சலசலப்பு இருந்திருக்கிறது அதிமுக வட்டாரத்தில் .

அதே நேரம்,  நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெல்லமண்டி நடராஜன் மூலம் சீட்டு பெற்றவர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை .  ஒருவேளை அதனால் கூட அவர் சந்திப்பதை தவிர்த்து இருக்கலாம்  என்ற பேச்சும் எழுந்திருக்கிறது அதிமுக வட்டாரத்தில்.