கருணாநிதி இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார் - துரைமுருகன் உருக்கம்

 
sd

 துபாயில் நடைபெற்று வரும் உலகக் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கினை திறந்துவைத்து துபாய் மற்றும் அபுதாபியில் தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு அந்நாடுகளின் அமைச்சர்கள் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்திக்க இருக்கிறார் முதல்வர் மு.க .ஸ்டாலின்.  இதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றிருக்கிறார். 

s cm

 முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் மற்றும் அபுதாபி செல்கிறார்.  முன்னதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றபோது,  தொடர்ந்து 6 நாட்களாக நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் இன்று நிதிநிலை அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் பதில் உரையாற்றினார்கள்.  

 பின்னர் துரைமுருகன் பேசியபோது,   நாட்டின் வளர்ச்சிக்காக வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களை ஈர்க்க தானாக முன்வந்து ஆயிரம் வேலைகள் இருக்கும் போது முதல்வர் மு.க. ஸ்டாலின் கடல்கடந்து துபாய் செல்கிறார்.   இன்றைய தினம் கடல் கடந்து துபாய்க்கு செல்லும் முதலமைச்சர் பல நாட்டு சர்வதேசர்கள் கூடுகின்ற உலகக் கண்காட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகிறார்.  அது உலகச் செய்தியாகும்.  

sds

அதனால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்ற முதலீட்டாளர்களையும் தமிழ்நாடு ஈர்க்கும்.  சுகாதாரம், வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்துறை முன்னேற்றம் என எல்லாத் துறையிலும் இந்த 10 மாத காலத்தில் நூறு ஆண்டுகள் அனுபவத்தோடு செய்து இருக்கிறார்.  அவரை நான் மனதார பாராட்டுகிறேன்.  இந்த அவையில் மட்டும் இப்போது தலைவர் கருணாநிதி இருந்திருந்தால் முதல்வரின் பணியை பார்த்து கண்ணீர் வடித்திருப்பார்  மற்றவர்கள் பார்ப்பதற்கு முன்பு அந்த கண்ணீரை அவர் துணியால் துடைக்கும் காட்சியை நான் நினைத்துப் பார்க்கிறேன் என்று உருக்கமுடன் பேசினார்.  பின்னர் அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி துபாய் பயணத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.