ஸ்டாலினுக்கும் தொல்லை கொடுக்கிறது பாஜக - மாஜி முதல்வரின் குற்றச்சாட்டு

 
sy

எனக்கு தொல்லை கொடுத்தது போல் ஸ்டாலினுக்கும் தொல்லை கொடுக்கிறது பாஜக  என்று குற்றம்சாட்டியிருக்கிறார் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி.

 புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி தனது ஆட்சி காலத்தில் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற படாத பாடுபட்டு வந்தார்.  மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் தொல்லை கொடுக்கிறது பாஜக என்று கடுமையாக குற்றம் சாட்டி வந்தார். 

 புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நாராயணசாமிக்கு கொடுத்து வந்த தொல்லைகள் குறித்து அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட விடாமல் செய்கிறார் ஆளுநர் என்று  கடும் கண்டனங்கள் எழுந்தன.   ஆனாலும் ஆளுநர் கிரண்பேடி தனது நடவடிக்கையிலும் உறுதியாக இருந்ததால் சாலையில் படுத்து தூங்கும்  போராட்டம் வரைக்கும் செய்து பார்த்து விட்டார் நாராயணசாமி.  ஆனாலும் கிரண்பேடி தனது நிலையிலிருந்து கொஞ்சம் இறங்கி வராமல் இருந்ததால் இருந்த நிலையில் ஆட்சியும் கவிழ்ந்தது.

VV

 தற்போது பாஜக என். ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.   இந்த நிலையில் ஆளுநர் கிரண்பேடி மூலம் தனக்கு தொல்லைகள் கொடுத்து போலவே தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் ரவி  மூலம் தொல்லை கொடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறார்.  

 இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவு ஒன்றில்,    இந்தியாவில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் எல்லாம் மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு அந்த மாநிலங்களில் நிர்வாகத்தை எந்த வகையில் முடக்க முடியுமோ அதற்கு முழுமையாக ஆளுநர்கள் துணைநிலை ஆளுநர்கள் பயணிகளுக்கு அந்த மாநில முதலமைச்சர்களுக்கு தொடர்ந்து கொடுத்து தொல்லை கொடுத்து வருகிறது.

இந்தியா ஒரு ஜனநாயக கூட்டமைப்பை கொண்ட நாடு என்று சொல்லப்படுகிறது.   ஆனால் எதிர்க்கட்சி ஆளும் மாநில முதலமைச்சர்களை உதாசீனப்படுத்தும் அரசியல் ரீதியாக அந்த மாநிலங்களையும் அரசு போதுமான தரம் தாழ்ந்த நிலையில் பிரதமர் மோடி செய்து வருகிறார் என்று தெரிவித்திருக்கும் நாராயணசாமி ,  கடந்த 5 ஆண்டுகாலம் நான் முதலமைச்சர் என்ற முறையில் வேதனைகளை அனுபவித்து வந்தேன்.  அதை இப்போது தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு ஆரம்பித்திருக்கிறது.

 நிதி கொடுக்காமல் மாநில அரசுக்கு குந்தகம் விளைவித்த இந்த அளவுக்கு குந்தகம் விளைவிக்க முடியுமா ஆளும் அரசுக்கு கெட்ட பெயர் உருவாக்கித் தரும் வேலையை பிரதமர் திட்டமிட்டு ஆளுநர் மூலம் செய்து வருகின்றார்.    இதனால்தான் ஸ்டாலின் காட்டமான அறிக்கைகளை விடுத்து வருகின்றார் என்று தெரிவித்துள்ளார்.