முதல்வர் மருமகனுக்கு அமலாக்கத் துறை சம்மன்

 
a


 ஊழல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கும், அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருக்கிறது.

ru

 மேற்கு வங்க மாநிலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த மோசடி தொடர்பாக கடந்த 2020ஆம் ஆண்டில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.  அதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. 

 இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருசிரா பானர்ஜி ஆகியோருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.   இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அபிஷேக் பானர்ஜியும், ருசிரா பானர்ஜியும் வழக்கு தொடர்ந்தனர். 

m

இந்த  ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் இருவருக்கும் உத்தரவிட்டிருந்தது.

 இதையடுத்து வரும் 21ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராகும்படி அபிஷேக் பானர்ஜிக்கும்,  22 ஆம் தேதி ஆஜராகுமாறு  ருசிரா பானர்ஜிக்கும்  அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பி உள்ளது.