தேர்தல் வந்தாலே பாஜகவுக்கு இதே வேலைதான் - ஈஸ்வரன் குற்றச்சாட்டு

 
er

கொமதேக பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்லடம் நகர மன்ற ஏழாவது வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

 இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,   பாஜகவை பொருத்தவரைக்கும் அக்கட்சியின் வரலாற்றை பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் தேர்தல்கள் நடை பெறுகிறதோ அப்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினையை தூண்டி விட்டு அதன் மூலம் வாக்காளர்களை கவர்ந்து வாக்குகளைப் பெறுவதில் தீவிரமாக இருப்பார்கள் பாஜகவினர். தற்போதும் அதே போல் தான் தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் பின்புலம் ஏதும் இல்லாமல் தனிநபர் செய்த செயலை தமிழக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

es

 இந்த நிலையில்  தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்கிறார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை.   அவர் இப்படி பேசியிருப்பது தமிழக மக்களிடையே சிரிப்பைத் தான் வரவழைத்திருக்கிறது.   கர்நாடகா பிரச்சனையும் ஜம்மு-காஷ்மீர் மாநில பிரச்சனையையும் பாஜகவினர் அரங்கேற்றி இருக்கிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

 மேலும் பேசியபோது,   கோவை- திருப்பூர் மாவட்டங்களில் தற்போது கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.   மிக முக்கியமான பிரச்சினையான விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் அமைச்சர்கள் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள்.   அதனால் உடனடியாக அமைச்சர்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு விசைத்தறியாளர்கள் போராட்டத்திற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.