உடைக்க முயற்சிக்காதீர்கள் உள்துறை அமைச்சரே! பிரகாஷ்ராஜ் நெத்தியடி!
நாங்கள் தைரியமானவர்கள். வீடுகளை உடைக்க முயற்சிக்காதீர்கள் உள்துறை அமைச்சரே என்று ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தினை பதிவிட்டிருக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ். நாங்கள் எங்கள் தாய் மொழியை நேசிக்கிறோம் . நாங்கள் பன்முகத்தன்மையை விரும்புகிறோம் . நீங்கள் இந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழி கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் அதுதான் தேசிய ஒருமைப்பாட்டிற்கான வழி. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டை முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்திருந்தார்.
அமித்ஷாவின் இந்த கருத்துக்கு நாடெங்கிலும் பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் , உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சர்ச்சை கருத்துக்கு தனது பதிலடியை கொடுத்திருக்கிறார்.
அவர், ‘’ நாங்கள் தைரியமானவர்கள் வீடுகளை உடைக்க முயற்சிக்காதீர்கள் உள்துறை அமைச்சரே!’’ என்று தெரிவித்திருக்கிறார். மேலும், ’’ நாங்கள் தேசத்தின் பன்முகத்தன்மையை விரும்புகிறோம். நாங்கள் எங்கள் மொழியை நேசிக்கிறோம் . நாங்கள் எங்கள் அடையாளங்களை விரும்புகிறோம். ஆகையால் நீங்கள் இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்’’என்று நெத்தியடியாக சொல்லி இருக்கிறார்.