50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாரா டிடிவி தினகரன்? டெல்லியில் விசாரணை

 
ttv

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லியில் அமலாக்கத்துறை முன்பாக டிடிவி தினகரன் என்று விசாரணைக்கு ஆஜரானார்.

 ஜெயலலிதாவின் மறைவை  அடுத்து ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.  அந்த தேர்தலில்  சசிகலா உறவினரான தினகரனும்,  ஓபிஎஸ் தலைமையிலான எதிரணியும் போட்டியிட்டன.  இப்போட்டியில் இரட்டை இலை சின்னம் கேட்டு இருவரும் உரிமை கோரினார்கள்.   இதனால் குழப்பம் ஏற்பட்டது .  இதையடுத்து தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது .

tt

இரட்டை இலை  சின்னத்தைப் தினகரன் இடைத்தரகர் சுரேஷ் சந்திரா வாயிலாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டு எழுந்தது.   

டிடிவி தினகரனும், 50 கோடி ரூபாய் பேரம் பேசி உதவியதாக அவரது உறவினர் மல்லிகார்ஜுனாவும்  கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டெல்லியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.   இதையடுத்து அவர் இன்று விசாரணைக்கு ஆஜராகி இருக்கிறார்.   இதேபோல் இடைத்தரகர் சுகேஷ்  சந்திராவும் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.