அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் - அதிமுக நிர்வாகி மீது வழக்கு

 
ad

 அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

 கரூர் மாவட்டம் நங்கவரம் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் கருப்பையா.   இவர் கடந்த அதிமுக ஆட்சியில் அதாவது 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் புஞ்சைபுகழூர் பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.

 கட்டிடம் உரிமம் வழங்குதல்,  சொத்து வரி நிர்ணயம் செய்தல்,  ஆய்வு செய்தல்,  மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்க களப்பணி செய்து சட்டத்திற்கு உட்பட்டு இருப்பின் அதனை செயல்படுவதற்கு செயல் அலுவலருக்கு பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வந்துள்ளார்.    நகர அதிமுக செயலாளராக உள்ள விவேகானந்தன் கடந்த 2009ஆம் ஆண்டு சுப்பு கார்டன் என்ற பெயரில் உள்ள மனைகளுக்கு தடையின்மை சான்று வழங்க கோரி விண்ணப்பித்து இருக்கிறார்.

vi

 உரிய முறையில் அங்கீகாரம் பெறாத மனைகளுக்கு தடையின்மை சான்று வழங்க கருப்பையா மறுப்பு தெரிவித்திருக்கிறார்.   இதனால் அங்கு பணியாற்றிய கருப்பையா பேரூராட்சிக்கு பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் .  பணிமாற்றம் செய்யப்பட்ட பின்னர் தன்னுடைய கையெழுத்தை போலியாக கையொப்பமிட்டு தடையின்மை சான்றிதழ் பெற்று கடந்த வருடம் ஏப்ரல் மாதம் அதிமுக நகரச் செயலாளர் விவேகானந்தன், அவரது மனைவி லலிதா, மாமியார் சரோஜா உள்ளிட்ட ஐந்து நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர் . 

இந்த மோசடியான பத்திரப்பதிவுக்கு காரணமாக பேரூராட்சிக்கு 15 லட்சத்து 58 ஆயிரத்து 946 ரூபாய் வரை இழப்பீடு இருக்கிறது ஏற்பட்டிருக்கிறது.    இதையடுத்து பேரூராட்சிகள் திண்டுக்கல் மண்டலத்தில் கருப்பையா புகார் தெரிவித்திருக்கிறார்.

 கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தடையின்மை சான்று வழங்கப்படாத சுப்பு காரடன்  இடம் தொடர்பாக போலீசார் அலுவலகத்திலும் விசாரணை நடத்த வேண்டும் மு. க.ஆட்சி நடப்பதால் கிடப்பில் போடப்பட்ட அந்த மனு தொடர்பாக மீண்டும் போலீசார் கருப்பையா விடம் விசாரணை நடத்தி வருகின்றனர் விசாரணைக்குப் பின்னர் விவேகானந்தர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 இதுகுறித்து விவேகானந்தரிடம் இன்று விசாரணை நடத்த போலீசார் சென்றபோது அதிமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.    போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததும் அவருடைய வீட்டிற்குச் சென்று போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை சரி செய்து தர வேண்டும் இல்லையென்றால் உன்னை உயிரோடு விடமாட்டோம் என்று மிரட்டியிருக்கிறார்கள்.   இதனால் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் கருப்பையா மிரட்டல்  புகார் அளித்திருக்கிறார்.

 வீட்டு மனையை போலியாக கையெழுத்திட்டு வாங்கி பதிவு செய்தது மட்டுமல்லாமல் அரசு ஊழியரை கொலை மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி விவேகானந்தன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.