திமுக அரசில் அரசு பள்ளிகளிலும் நடக்குதே! கொதித்தெழும் பாஜக

 
st

இது நாள் வரை கிறுஸ்துவ மிஷினரி நடத்தும் பள்ளிகளில் நடைபெற்று வந்த இந்த குற்றங்கள் தற்போது திமுக அரசில் அரசு பள்ளிகளிலும் நடைபெறுகின்றன. லாவண்யா மதமாற்ற விவகாரத்தில் ஹிந்து விரோத திமுக அரசின் மெத்தனப்போக்கே இது போன்ற பயங்கரங்கள் நடைபெறுவதற்கு காரணம் என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

 கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.   இந்த பள்ளியில் தையல் கலை ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியை,    இந்துமத மாணவிகளிடம் இந்து மத கடவுள்களை அவதூறாக பேசி வருகிறார்.   கிறிஸ்தவ மத பிரார்த்தனைகளை சொல்லி பிரார்த்தனை செய்ய சொல்லி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

ku

 இதையடுத்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் அளித்திருக்கிறார்கள்.   பெற்றோர்கள் இரணியல் போலீசாருக்கு தகவல் அளித்து அவர்களுடன் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.  போலீசார் விசாரணை நடத்தியதில் மாணவிகள் ஆசிரியையின் நடவடிக்கை குறித்த குற்றச்சாட்டை  முன்வைத்து இருக்கிறார்கள்.  இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் போலீசார் முன்னிலையில் மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில் ,   மதமாற்ற சர்ச்சை வீடியோ தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஆட்சித் தலைவருக்கு உத்தரவிட பட்டிருக்கிறது.   இதற்காக மாவட்ட கல்வி அலுவலர் எம்பெருமாள் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.    விசாரணைக்கு பின்னர் துறைவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

nn

இதுகுறித்து நாராயணன் திருப்பதி,  ‘’கன்னியாகுமரி மாவட்டம்,  கண்ணாட்டுவிளையில் அரசு பள்ளியில் மாணவிகளை ஒரு ஆசிரியையே  மதமாற்றம் செய்ய முனைந்திருப்பது  வன்மையாக கண்டிக்கத்தக்கது. திருக்காட்டுபள்ளி லாவண்யா மதமாற்ற விவகாரத்தில் ஹிந்து விரோத திமுக அரசின் மெத்தனப்போக்கே இது போன்ற பயங்கரங்கள் நடைபெறுவதற்கு காரணம். இது நாள் வரை கிறுஸ்துவ மிஷினரி நடத்தும் பள்ளிகளில் நடைபெற்று வந்த இந்த குற்றங்கள் தற்போது திமுக அரசில் அரசு பள்ளிகளிலும் நடைபெறுகின்றன. ஹிந்து கடவுளை சாத்தான் என்று சொல்லி, ஏசுவை வணங்க வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளதன் பின்னணியில் உள்ள மதமாற்ற தீய சக்திகளை அடையாளம் கண்டு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் திமுக அரசு’’என்ற வேண்டுகோளினை முன்வைத்திருக்கிறார்.