பாஜகவினரிடம் சிக்கிய திமுக நிர்வாகிகள்
வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களை சுற்றி வளைத்து பாஜகவினர் கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் பணம் விநியோகம் செய்ததில் திமுக -அதிமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சிக்கு உடைய 70வது வார்டுக்கு உட்பட்ட தெப்பக்குள மைதானம் சுக்ரவார் பேட்டை பகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக தகவல் வந்திருக்கிறது. இதையடுத்து அங்கு விரைந்த பாஜகவினர், பணம் விநியோகம் செய்த 6 பேரில் 3 பேரை அப்போதே சிறை பிடித்தனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட திமுகவை சேர்ந்த 3 பேரை மீட்டு உள்ளனர். அவர்களிடமிருந்து கட்டு கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.