பெண் வேட்பாளரின் கணவரை பளார் பளார் என அறைந்த திமுக நிர்வாகி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதியன்று நடைபெற இருக்கிறது. ஜனவரி 28ஆம் தேதி முதல் பிப்ரவரி 4-ஆம் தேதி வரைக்கும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 5ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை என்றும், ஏழாம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஐந்தாம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்து இருக்கும் நிலையில், நாளை வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதியாகும்.
பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவினை அடுத்து பிப்ரவரி 28ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்பு முதல் கூட்டம் மார்ச் 2ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது.
இதன் பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் மறைமுக தேர்தல் மூலம் சிவகாசி மாநகராட்சிக்கான மேயர், துணை மேயர், 5 மாநகராட்சி, 9 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் வரும் மார்ச் 4-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் வேட்புமனுத்தாக்கல் 40 வார்டுகளை கொண்ட புதிதாக அறிவிக்கப்பட்ட சிவகாசி களை மாநகராட்சியில் போட்டியிடக்கூடிய அதிமுக-திமுக, விஜய் மக்கள் இயக்கம் , பாஜக , நாம் தமிழர் கட்சி , மக்கள் நீதி மையம் என்று 322 பேர் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
.
வேட்பு மனு பரிசீலனைக்கு அதிமுகவினர் அதிகமாக மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார்கள். ஆனால் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று திமுகவினர் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நகர திமுக பொறுப்பாளர் உதயசூரியன் 20 வது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளரின் கணவர் கருப்பசாமியை போலீசார் முன்னிலையில் பளார் பளார் என்று அறைந்திருக்கிறார். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
பெண் வேட்பாளரின் கணவரை போலீசார் முன்னிலையில் திமுக நகர வேட்பாளர் பளார் பளார் என்று அறைந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.