வரிக்கு வரி பதிலடி கொடுத்த முதல்வர்!

 
st

தமிழ்நாடு சட்டமன்ற மன்றத்தில் இன்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டது.  சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்தார்.  அதன் பின்னர் விவாதங்கள் நடைபெற்றன.   அப்போது நீட் விலக்கு  மசோதா குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்திற்கு வரிக்கு வரி பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.

நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக தமிழ்நாடு அரசினால் அமைக்கப்பட்ட நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கை யூகங்களின் அடிப்படையில் ஆனது என்று தெரிவித்திருக்கிறார் ஆளுநர்.   10.6. 2021 அன்று நீதியரசர் இயற்கை ராஜன் குழு அமைக்கப்பட்டது . இக்குழுவில் பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தார்கள்.   இந்த உயர்மட்டக் குழுவின் ஆய்வு வரம்புகளும் வெளியிடப்பட்டது.   பொதுமக்கள்  அனைவரிடமிருந்தும் கருத்துக்களை கேட்டு பெற்றுக்கொள்ளப்பட்டது.

ss

 மின்னஞ்சல்,  தபால் தவிர ஆணையத்தில் வைக்கப்பட்டிருந்த கருத்து கேட்பு பெட்டியில் போடப்பட்ட மனுக்கள் என்று ஆணையத்திற்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கியிருந்தார்கள்.   இந்த வழிமுறைகள் வாயிலாக 86 ஆயிரத்து 342 பேர் உங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அறிந்து தனது விரிவான பரிந்துரைகளை  ராஜன் குழு அரசுக்கு 14. 7. 2021 அரசுக்கு அளித்தது .  இது தனிப்பட்ட சிலரின் யூகங்களின் அடிப்படையில் அல்ல .  சுமார் ஒரு லட்சம் பேரின் கருத்துக்களை கேட்டு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

 அந்த பரிந்துரைகளில் சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியை பெறும் கனவு இடையூறாகவும் சமூக பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து எம்பிபிஎஸ் மற்றும் உயர் மருத்துவ படிப்புகளில் உள்ள பலதரப்பட்ட சமூக பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வானது குறித்து இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது .   இதுவும் யூகம் அல்ல இதற்கான புள்ளி விவரமும் அந்த அறிக்கையில் விரிவாக இருக்கிறது என்றார் முதல்வர்.

sss

 அரசுப் பள்ளியின் மாணவர்கள் பெற்றோரின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக கொண்டிருப்பவர்கள்,  மிகப் பிற்படுத்தப்பட்டோர் , பட்டியல் இனத்தவர் பட்டியல் பழங்குடியினர் போன்ற பிரிவுகளை சேர்ந்த வசதி குறைந்தவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.    இதுவும் யூகமாக அல்ல புள்ளிவிவரங்களுடன் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 இதுவரை தேர்வுகளில் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.   அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதையும் இந்த அறிக்கை சொல்கின்றது .  தமிழக அரசால் வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்கள் பலன் பெற்றவர்கள் என்று யாரும் தவறாக கணக்கிட்டு கொள்ளக் கூடாது என்றும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

 இயற்பியல், வேதியல், உயிரியல் தேர்வு குறித்து இந்த அறிக்கையில் இல்லை என ஆளுநர் கூறியிருக்கிறார்.   பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதும் அறிவியல் பிரிவு மாணவர்கள் அனைவருமே இந்த 3 படங்களையும் படிக்கின்றார்கள்.   ஆகவே இம் மூன்று பாடங்களில் சேர்ந்தவர்கள்தான் பன்னிரண்டாம் வகுப்பில் உயர்ந்த இடங்களை பெறுகிறார்கள் .  அதனால்தான் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் போதுமானது என்று நாங்கள் சொல்கின்றோம்.  இன்னொரு படிப்ப் தேவையில்லை என்று சொல்கின்றோம் என தெரிவித்தார்.