மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் - இளையராஜா

 
am

 பிரதமர் மோடியின் ஆட்சியை பார்த்து அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று இசையமைப்பாளர் இளையராஜா புகழாரம் சூட்டியிருக்கிறார்.

 மோடியும் அம்பேத்கரும் என்ற நூலினை வெளியிட்டு இருக்கிறது புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம்.   இந்நூலுக்கு இளையராஜா முன்னுரை எழுதியிருக்கிறார்.   அந்த முன்னுரையில் அம்பேத்கரை தெரிந்து கொள்வதைப் போல அவரது கருத்தையும் சிந்தனைகளையும் செயல்படுத்துகின்ற அவர்களையும் நாம் நிச்சயம் ஊக்கப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ள இளையராஜா,    நாட்டின் வளர்ச்சி. தொழில்துறை. சமூகநீதி. பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக மோடி அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் அம்பேத்கரின் கருத்தும் சந்திக்கும் இடத்தை இந்த புத்தகம் ஆய்வு செய்ய எத்தனிக்கின்றது என்று தெரிவித்திருக்கிறார்.

i

 அவர் மேலும் அந்நூல்  குறித்து,   பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறது .  நாட்டில் ரயில் போக்குவரத்து, சாலைகள், மெட்ரோ ரயில், விரைவு எக்ஸ்பிரஸ் சாலைகள் போன்றவை உலக தரத்துடன் அமைக்கப்பட்டிருக்கின்றன.  உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன .  சமூக நீதியை பொருத்தவரைக்கும் பல்வேறு சட்டங்களை செயல்படுத்தி வருகிறார் பிரதமர் மோடி.   பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்து சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்.   வீடுகள் மற்றும் கழிப்பிடங்களை எளிய மக்களுக்காக மோடியின் ஆட்சியில் கட்டி கொடுக்கப்பட்டிருக்கின்றன.  இதனால் ஏழைகளின் வாழ்க்கை முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 தொடர்ந்து அந்நூல் குறித்து இளையராஜா,   முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாக முஸ்லிம் பெண்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி.   பெண் குழந்தைகளை பாது காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டமும் பெண்களின் திருமண வயதை உயர்த்த முடிவு எடுத்ததும் பெண் சமுதாயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை .

இப்படியான மோடி ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு நிச்சயம் அம்பேத்கரே பெருமைப்படுவார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.  அம்பேத்கருக்கும் மோடிக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கின்றன.   இருவருமே ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள்.  அதை ஒழிக்க பாடுபட்டவர்கள்.  இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் .  இப்படி இருவரும் ஒன்று படுவதை இந்த புத்தகம் எடுத்துக் காட்டுகிறது.   இதனை இளைய தலைமுறையினருக்கு நான் பரிந்துரைக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் இளையராஜா.