அதிமுக மாஜி மீது 6 வாரங்களுக்குள் விசாரணை - தமிழக அரசு அதிரடி

 
ass

அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ பிரபு மீதும்,  அவரது பெற்றோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில் 6 வாரங்களுக்குள் விசாரணை நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.   சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு இவ்வாறு தெரிவித்திருக்கிறது. 

 கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பத்து ரூபாய் இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஓம்பிரகாஷ்.    இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில்,  தியாகதுருகம் அதிமுக ஒன்றியச் செயலாளர் அய்யப்பா,  ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரான அவரது மனைவி தயாளு அம்மாள்,   கள்ளக்குறிச்சி திமுக முன்னாள் எம்எல்ஏ பிரபு ஆகியோர் கடந்த 2001ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 55 வீடுகள் 2 பங்களாக்கள் 100 ஏக்கர் நிலம் என்று அதிகார துஷ்பிரயோகம் செய்து சொத்து சேர்த்து வைக்கின்றனர் என்று தெரிவித்திருக்கிறார்.

p

 வீட்டு வசதி திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்களிடமிருந்தும்,   அங்கன்வாடி பணிகளுக்கு லஞ்சம் வாங்கியதன் மூலமும் இவர்கள் சொத்து சேர்த்து இருப்பதற்காக அவர் புகாரில் தெரிவித்து இருக்கிறார் . 

வருமானத்திற்கு அதிகமாக 35 கோடியே 65 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து இருக்கிறார்கள் என்று அவர் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார். அந்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பு 70 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்றும், அது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த 1ஆம் தேதியன்று லஞ்ச ஒழிப்புத் துறையிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லாததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி,   புகார் தற்போது தான் கிடைத்திருக்கிறது .  ஆறு வாரங்களுக்குள் விசாரணை நடத்தப்படும் என்றும்,   தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.   இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள்  விசாரணையை தொடங்கி விரைவில் முடிக்க வேண்டும் என்றும் விசாரணையின் முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

 இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அதிமுக எம்எல்ஏ பிரபுவும்,  அவரது பெற்றோரும் பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளனர் நீதிபதிகள்.