600 கோடி ரூபாய் சொத்துக்கள் - கே.பி. அன்பழகன் மீதான புகாரில் முகாந்திரம்

 
k

வருமானத்திற்கு அதிகமாக 600 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்ததாக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்   கே.பி. அன்பழகன்  மீது அளிக்கப்பட்ட புகாரில் முகாந்திரம் உள்ளது என்று லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 தர்மபுரி மாவட்டம் மோளையானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில்,   தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே. பி. அன்பழகன் தனது பதவி காலத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கான சொத்து சேர்த்திருக்கிறார் .   800 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு பணிகளுக்கான டெண்டர் பணிகளை தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

aa

டெண்டர் வெளிப்படை சட்டத்தின் கீழ் உரிய விதிகள் இதில் பின்பற்றப்படவில்லை என்றும் தனது குடும்பத்தார் பெயரில் நிலங்கள் கட்டிடங்கள் மருத்துவமனைகள் என்று 600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.   மேலும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் பினாமி பெயர்களில் சொத்துக்கள் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தலின்போது கே.பி. அன்பழகன் குறிப்பிட்ட சொத்துகளின் மதிப்பு 53 லட்சத்து ஐம்பத்தி ஆறு ஆயிரத்து 889 ரூபாய்.   ஆனால் 2011 தேர்தலில் 26 கோடியே 81 லட்சத்து 30 ஆயிரத்து 790 ரூபாய் என்று காட்டிக்காட்டியிருக்கிறார்.   தேர்தல் ஆணைய படிவத்தில் சொத்துக்களையும்  மறைத்திருக்கிறார். ஆகவே முன்னாள் அமைச்சர் அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு பதிவு செய்யக்கோரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தேன்.

 இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.   இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா,   புகாரின் அடிப்படையில் உள்ளது என்றும் ஆவணங்கள் திரட்டடப்பட்டு வருகின்றது என்றும்,  அதற்காக கால அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்தார்.   இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்.

 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி. அன்பழகன் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில் இன்றைக்கு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று இருப்பது மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.