ஆண்டிப்பட்டி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 

ஆண்டிப்பட்டி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

தேனி

ஆண்டிப்பட்டி அருகே 12 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த மயிலாடும்பாறை ஊராட்சி இந்திரா நகரை சேர்ந்தவர் அசோக்குமார். விவசாயி. இவரது மகள் நிவேதா (17). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

ஆண்டிப்பட்டி அருகே பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

இதனிடையே, நிவேதா, கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அவதிபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த தகவலின் பேரில் மயிலாடும்பாறை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.