தேர்தல் முடிந்தது….சைக்கிளில் ஜாலியாக கிளம்பிய ஸ்டாலின்

 

தேர்தல் முடிந்தது….சைக்கிளில் ஜாலியாக கிளம்பிய ஸ்டாலின்

தேர்தல் நடந்து முடிந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளார்.

தேர்தல் முடிந்தது….சைக்கிளில் ஜாலியாக கிளம்பிய ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் கட்சி பணிகளுக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு வந்தார். அதாவது சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உடற்பயிற்சிக்காக தனது மருமகன் சபரீசன் உடன் அவர் சைக்கிள் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். வார இறுதி நாட்களில் சுமார் 40 கிலோமீட்டர் வரை செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தார் ஸ்டாலின்.

தேர்தல் முடிந்தது….சைக்கிளில் ஜாலியாக கிளம்பிய ஸ்டாலின்

தேர்தலுக்கான கூட்டணி ,தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளுக்காக , கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சைக்கிள் பயணம் மேற்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஸ்டாலின் தனது சைக்கிள் பயணத்தை தொடங்கி உள்ளார்.

தேர்தல் முடிந்தது….சைக்கிளில் ஜாலியாக கிளம்பிய ஸ்டாலின்

இன்று காலை சென்னை கடற்கரை சாலையில் சுமார் 30 கிலோமீட்டர் வரை பயணம் செய்தார். அப்போது அவரை அடையாளம் கண்ட பொதுமக்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.