மறைந்த திமுக எம்எல்ஏக்களின் படத்தை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் மரியாதை!

 

மறைந்த திமுக எம்எல்ஏக்களின் படத்தை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் மரியாதை!

திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.சாமி மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காத்தவராயன் ஆகியோர் அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, சேப்பாக்கம் திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். இந்த 3 சட்டமன்ற உறுப்பினர்களின் மறைவையடுத்து அந்த தொகுதிகள் அனைத்தும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இவர்களை தொடர்ந்து பல திமுக எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மறைந்த திமுக எம்எல்ஏக்களின் படத்தை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் மரியாதை!

சமீபத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கொரோனாவால் உயிரிழந்த ஜெ.அன்பழகனின் படத்தை திறந்து வைத்தார். இந்த நிலையில், ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து ஸ்டாலின் கேபிபி சாமி மற்றும் காத்தவராயனின் படங்களை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், திமுக மூத்த நிர்வாகிகள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, கடமை கண்ணியம் கட்டுப்பாடு போல உடல்நலம், திமுக பணி, மக்கள் சேவையை கடைபிடியுங்கள் என்றும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் கட்சிப்பணி, மக்கள் சேவையை ஆற்ற முடியும் என்றும் வேறு உடல்நல கோளாறு உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.