ம. பி. ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

 

ம. பி. ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

மத்திய பிரதேச ஆளுநராக இருந்த வந்த லால்ஜி தாண்டன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் சிறுநீரகக் கோளாறு, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ம. பி. ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

ஆளுநர் லால்ஜி தாண்டன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். இதை அவரது மகன் அசுதோஷ் தாண்டன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். உ. பியின் லக்னோவை சேர்ந்த லால்ஜி பாஜகவின் எம்பியாகவும் , பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார். ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி  உள்ளிட்ட  பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ம. பி. ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “பொது வாழ்விலும், மக்கள் சேவையும் லால்ஜி தாண்டனின் பணி மகத்தானது. உபி எம்எல்ஏ, எதிர்க்கட்சி தலைவர், எம்பி , பீகார் ஆளுநர் என திறம்பட பணியாற்றினார் லால்ஜி தாண்டன்” என்று குறிப்பிட்டுள்ளார்.