ம. பி. ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவு : முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
மத்திய பிரதேச ஆளுநராக இருந்த வந்த லால்ஜி தாண்டன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் சிறுநீரகக் கோளாறு, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆளுநர் லால்ஜி தாண்டன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். இதை அவரது மகன் அசுதோஷ் தாண்டன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். உ. பியின் லக்னோவை சேர்ந்த லால்ஜி பாஜகவின் எம்பியாகவும் , பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார். ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “பொது வாழ்விலும், மக்கள் சேவையும் லால்ஜி தாண்டனின் பணி மகத்தானது. உபி எம்எல்ஏ, எதிர்க்கட்சி தலைவர், எம்பி , பீகார் ஆளுநர் என திறம்பட பணியாற்றினார் லால்ஜி தாண்டன்” என்று குறிப்பிட்டுள்ளார்.