ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவு :பிரதமர் மோடி இரங்கல்!
மத்திய பிரதேச ஆளுநராக இருந்த வந்த லால்ஜி தாண்டன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் சிறுநீரகக் கோளாறு, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த ஜூன் 11-ம் தேதி முதல் லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆளுநர் லால்ஜி தாண்டன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துள்ளார். இதை அவரது மகன் அசுதோஷ் தாண்டன் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். உ. பியின் லக்னோவை சேர்ந்த லால்ஜி பாஜகவின் எம்பியாகவும் , பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார்.
Shri Lalji Tandon will be remembered for his untiring efforts to serve society. He played a key role in strengthening the BJP in Uttar Pradesh. He made a mark as an effective administrator, always giving importance of public welfare. Anguished by his passing away. pic.twitter.com/6GeYOb5ApI
— Narendra Modi (@narendramodi) July 21, 2020
இந்நிலையில் ஆளுநர் லால்ஜி தாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “லால்ஜி டாண்டன் ஒரு திறமையான நிர்வாகி, பொது நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர்.உத்தரபிரதேச பாஜகவின் வளர்ச்சியில் லால்ஜி டாண்டனின் பங்கு அளப்பரியது”என்று பதிவிட்டுள்ளார்.