கோழிக்கோடு விமான விபத்து : மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் இரங்கல்!
துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியதில் சுமார் 18 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் கவலைக்கிடமாக 120 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இடைவிடாது பெய்யும் கனமழை, நிலச்சரிவில் காணாமல் போன மக்கள் என கடந்த சில நாட்களாக துயரத்தின் உச்சத்தில் இருக்கும் கேரள மாநிலத்திற்கு மேலும் ஒரு சோக செய்தியாக கோழிக்கோடு விமான விபத்து மாறியுள்ளது.
Condolences to the families who lost their members in the Kozhikode crash. Best wishes to those recovering in Hospitals. Kudos to the citizens of Calicut and the under-equipped staff of the airport. More strength to the already overworked medical professionals of Kerala.
— Kamal Haasan (@ikamalhaasan) August 8, 2020
இந்நிலையில் இதுகுறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “கோழிக்கோடு விபத்தில் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மருத்துவமனைகளில் மீண்டு வருபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். கோழிக்கோடு மக்களுக்கும், விமான நிலையத்தின் கீழ் வசிக்கும் ஊழியர்களுக்கும் பாராட்டுக்கள். அதிக உழைப்பை தரும் மருத்துவ நிபுணர்கள் கேரளாவிற்கு கூடுதல் பலம்” என்று குறிப்பிட்டுள்ளார்.