செப்.15-ல் கோயம்பேடு சந்தை திறப்பு? சிஎம்டிஏ தகவல்!

 

செப்.15-ல் கோயம்பேடு சந்தை திறப்பு?  சிஎம்டிஏ தகவல்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 5ஆம் தேதி மூடப்பட்ட கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க கோரி வணிகர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

செப்.15-ல் கோயம்பேடு சந்தை திறப்பு?  சிஎம்டிஏ தகவல்!

இதன் காரணமாக நேற்று சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். கோயம்பேடு திறப்பது குறித்து இன்று காலை 11 மணிக்கு கோயம்பேடு சந்தையில் நேரில் ஆய்வு மேற்கொள்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்.

செப்.15-ல் கோயம்பேடு சந்தை திறப்பு?  சிஎம்டிஏ தகவல்!

இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் செப்டம்பர் 15-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக சிஎம்டிஏ தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் இன்னும் குறையாவிட்டாலும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்படவுள்ளது.