கந்துவட்டி தொல்லை : வீடியோ வெளியிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

 

கந்துவட்டி தொல்லை : வீடியோ வெளியிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

கந்துவட்டி தொல்லை காரணமாக இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வறுமையின் பிடியில், பசிக் கொடுமையில் மக்கள் வாடிவரும் நிலையில் கந்துவட்டி கொடுமை என்பது மட்டும் இன்னும் முடிந்தபாடில்லை. வங்கிகளில் வாங்கிய கடன்களை மக்களிடம் கேட்டு தொந்தரவு செய்யக் கூடாது என பல மாவட்ட ஆட்சியர்கள் கடந்த சில நாட்களாக அறிவித்து வந்த நிலையில் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் மட்டும் சரியாக வட்டி பணத்தை வாங்கிக் கொண்டு செல்லும் கொடுமை தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

கந்துவட்டி தொல்லை : வீடியோ வெளியிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

இந்நிலையில் மதுரை மகபூப்பாளையத்தை சேர்ந்த 37 வயது இளைஞர் முஹம்மது அலி. இவர் செல்வக்குமார் என்பவரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த நிலையில் வட்டி செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

கந்துவட்டி தொல்லை : வீடியோ வெளியிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

இருப்பினும் செல்வக்குமார் தொடர்ந்து வட்டி கேட்டு மிரட்டி வந்த நிலையில், கந்துவட்டி தொல்லை காரணமாக தற்கொலை செய்தவதாக கூறி காவல்துறையினருக்கு வீடியோ வெளியிட்ட இளைஞர் முஹம்மது அலி பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் காவல்துறையின் கவனத்துக்கு செல்ல, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.