திமுக வேட்பாளர் வீட்டில் இன்றும் தொடரும் சோதனை: திக்.. திக்.. நிலைமையில் திமுக!!

 

திமுக வேட்பாளர் வீட்டில் இன்றும் தொடரும் சோதனை: திக்.. திக்.. நிலைமையில் திமுக!!

திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

திமுக வேட்பாளர் வீட்டில் இன்றும் தொடரும் சோதனை: திக்.. திக்.. நிலைமையில் திமுக!!

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரி, வீடு உள்ளிட்ட இடங்களில் நேற்று ஐ.டி.ரெய்டு நடந்தது. சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. இவரை ஆதரித்து நேற்று ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது எ.வ.வேலு கல்லூரியில் தேர்தலுக்காக பணம் பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் கிடைத்தாக கூறி வருமானவரித்துறையினர் சோதனை செய்தனர்.

திமுக வேட்பாளர் வீட்டில் இன்றும் தொடரும் சோதனை: திக்.. திக்.. நிலைமையில் திமுக!!

இந்நிலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான 16 இடங்களில் சுமார் 19 மணி நேரத்தை கடந்து இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீடு மற்றும் திருவண்ணாமலையில் உள்ள எ.வ.வேலுவின் வீடுகள், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 2வது நாளாக சோதனை நடந்து வருகிறது.முன்னதாக திமுக வேட்பாளர் எ.வ வேலு வீட்டில் நடந்த ஐடி ரெய்டு குறித்து கருத்து தெரிவித்த மு.க. ஸ்டாலின் “தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் பாஜகவை தூண்டிவிட்டு ஐடி ரெய்டு செய்ய வைக்கிறது அதிமுக அரசு. இது போன்ற செயல்கள் அதிமுகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது” என்று குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.