நல்ல நேரம் அமையாததால் 11 ஆண்டுகள் கணவருடன் சேராமல் இருக்கும் மனைவி

 
ச்

 விவாகரத்து கோரவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் வினோதமான காரணங்களை எல்லாம் முன்வைத்து விவாகரத்து கேட்பது வழக்கமாக இருக்கிறது.  அந்த காரணங்கள் சில சமயங்களில் நீதிபதியை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.   அப்படித்தான் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்து இருக்கிறது.

 அம்மாநிலத்தில் கடந்த 2010ஆம் ஆண்டில் சந்தோஷ் சிங் என்பவருக்கு திருமணம் நடந்திருக்கிறது.   திருமணத்திற்குப் பின்னர் அவர் தனது மனைவியுடன் 11 நாட்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து இருக்கிறார்.  அதன்பின்னர் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  அதன் பின்னர் கணவருடன் வாழ வராமல் தாய் வீட்டிலேயே தங்கி இருந்திருக்கிறார். 

டி

 இதற்கு அவ்வப்போது பல்வேறு காரணங்களை சொல்லிக் கொண்டே வந்திருக்கிறார்.   பலமுறை மனைவியை தன் வீட்டிற்கு அழைத்து வர முயன்றும் சந்தோஷ் சிங்கினால் முடியவில்லை.    ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்லி தாய் வீட்டிலேயே இருந்திருக்கிறார்.  இப்படி ஒரு மாதம் இரண்டு மாதம் இல்லை  ஒரு வருடம் இரண்டு வருடம் இல்லை 11 வருடங்கள் இப்படி கடந்து இருக்கின்றன .

இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ் சிங் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்து இருக்கிறார்.   அவ்வப்போது அரசு பணிகளை காரணம் காட்டி அந்தப் பெண் வழக்கில் ஆஜராகாமல் இருந்து இருக்கிறார்.  பிளாஸ்பூர்  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததும் சந்தோஷ் சிங்கின் அப்பெண்ணிடம் ஏன் கணவருடன் சேர்ந்து வாழ வில்லை? என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

 அதற்கு அவர்,  நல்ல நேரம் எதுவும் வாய்க்காத காரணத்தால்தான் கணவருடன் செல்லவில்லை என்று சொல்லியிருக்கிறார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதி மகிழ்வான குடும்பம் அமைய நல்ல நேரம் தேவையாக இருக்கும் .  ஆனால் இந்த வழக்கில் உறவை முறிப்பதற்கு நல்ல நேரத்தையே ஒரு கருவியாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.   இதையடுத்து இருவருக்கும் விவாகரத்து வழங்கி உத்தரவிட்டிருக்கிறார்.