பாலியல் வழக்கில் பாதிரியார் விடுதலை - கன்னிகாஸ்திரி எதிர்ப்பு

 
mu

பாலியல் வழக்கில் பாதிரியார் பிராங்க்கோ முலக்கல் விடுவிக்கப்பட்டார்.   கன்னிகாஸ்திரி தொடுத்த பாலியல் வன்புணர்வு வழக்கில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட பாதிரியார் பிராங்க்கோ விடுவிக்கப் பட்டிருக்கிறார்,

 கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாதிரியார் பிராங்க்கோ முலக்கள்  மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் ஒன்றை கூறியிருந்தார்.

mu

 கடந்த 2008ம் ஆண்டில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

 இந்த வழக்கின் விசாரணையின் தீர்ப்பை கோட்டயம் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று வழங்கியிருக்கிறது.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் குற்றவாளி என்று நிரூபணம் செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என்பதால் பாதிரியார் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார் என்று நீதிபதி கோபக்குமார் உத்தரவிட்டிருக்கிறார்.  இந்த தீர்ப்பு குறித்து பாதிரியார் பிராங்க்கோ இறைவனுக்கு நன்றி  தெரிவித்திருக்கிறார்.  அவர் மேலும்,  உண்மையாக உண்மை இறுதியாக வெல்லும் என்ற நம்பிக்கை பொய்யாகி இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

 இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்திருக்கும் கன்னிகாஸ்திரி தரப்பினர் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.