“தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்” : பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் ட்வீட்!
கடந்த 10ம் தேதி முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது.
அதற்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரணாப் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
Yesterday , I had visited my Father In Hospital . With God's grace & all your good wishes , He is much better & stable than D preceeding days! All his vital parameters are stable & he is responding to treatment ! We firmly believe that He will be back among us soon
Thank You🙏— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 16, 2020
இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, “கடவுளின் ஆசியாலும், உங்களின் பிராத்தனையாலும் என் தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.