திருக்குறள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

 

திருக்குறள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பேசும் பல இடங்களில் திருக்குறளை மேற்கொள் காட்டுவதும் பேசும் சூழலுக்கு ஏற்ற திருக்குறள்களைக் கூறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை பிரதமரின் ஆதரவு நிலைபாட்டுள்ள பலரும் வரவேற்கின்றனர்.

பத்திரிகையாளர் மாலன், நரேந்திர மோடி பேசும்போது பயன்படுத்திய திருக்குறள்களை அடிப்படையாக வைத்து ஒரு கட்டுரை எழுதினார் அதைப் பாராட்டும் விதமாக நரேந்திர மோடி தமிழில் ட்விட் செய்தார். இன்னொரு புறம் மேற்கோள் காட்ட திருக்குறளை கையாண்டாலும், பாடப் புத்தகங்களிலிருந்து திருக்குறள் பகுதி நீக்கப்படுவதாகவும் சிலர் குற்றம் சாட்டாமல் இல்லை.

திருக்குறள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி, பாரத பிரதமருக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

அந்தக் கோரிக்கையில், ‘உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட சிறந்த நூல் திருக்குறள், அதனை இன்றைய இளைஞர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ஏற்கெனவே லடாக் எல்லை பகுதியில் படைவீரர்களைச் சந்தித்து உரையாடிய போது

“மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு”

என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசியுள்ளார். இப்படி திருக்குறளின் மேன்மையை, பெருமையை, திக்கெட்டும் பேசி, பரப்பி வரும் மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

திருக்குறள் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

திருக்குறளின் அருமை, பெருமையை அறிந்து, உணர்ந்து, மகிழ்ந்து போற்றிப் பேசிவரும் பிரதமர் அவர்கள்; “திருக்குறள் ஆராய்ச்சி மற்றும் அறநெறி பரப்பும் உலக மையம்” ஒன்றை நிறுவ வேண்டும், அதன் மூலம் குறள் சொல்லும், அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளை உலகமெல்லாம் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.