அதி அற்புதமான ஊக்குவிப்பு நூல் திருக்குறள்! – மோடி ட்வீட்
அதிஅற்புதமான, ஊக்குவிப்பு நூல் திருக்குறள் என்று பிரதமர் மோடி இன்று ட்வீட் செய்துள்ளார். பலரும் அதை ரீட்வீட் செய்து வருகின்றனர்.
பத்திரிகையாளர் மாலன் வாரப் பத்திரிகை ஒன்றில் பிரதமர் மோடியின் திருக்குறள் பற்று தொடர்பாக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அந்த கட்டுரையை பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
The Tirukkural is extremely inspiring. It is a treasure of rich thoughts, noble ideals and great motivation.
The words of respected Thiruvalluvar have the power to spread hope and brightness.
I hope more youngsters across India read it! pic.twitter.com/Fxi8ROkp0t
— Narendra Modi (@narendramodi) July 16, 2020
அதில், “திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.
தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுறுவர் என நம்புகிறேன்”எனக் குறிப்பிட்டுள்ளார். பா.ஜ.க-வினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதற்கு லைக் செய்து, ரீட்வீட் செய்து வருகின்றனர்