தனது அழைப்புகளை திருமாவுக்கு கால் டைவர்ட் செய்த காயத்ரி ரகுராம் : டிவிட்டரில் அனல் பறக்கும் விவாதம்!

 

தனது அழைப்புகளை  திருமாவுக்கு கால் டைவர்ட் செய்த காயத்ரி ரகுராம் : டிவிட்டரில் அனல் பறக்கும் விவாதம்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘கறுப்பர் கூட்டம்’ விவகாரம் குறித்து பேசிய எம்பியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், “ஒரு பிராமணர் கூட பழனிக்கோ திருத்தணிக்கோ அலகு குத்தியோ, காவடி எடுத்தோ சென்றதுண்டா? இன்று ஹெச். ராஜா போன்றவர்களேல்லாம் முருகருக்காக வரிந்துக்கட்டி வருகிறார். யாரை ஏமாற்றுகிறார்கள். தமிழ் கடவுள் முருகரை பற்றி கவலைப்பட தமிழர்கள் வரட்டும். ஹெச். ராஜா வரக்கூடாது” என்று கூறியிருந்தார்.

தனது அழைப்புகளை  திருமாவுக்கு கால் டைவர்ட் செய்த காயத்ரி ரகுராம் : டிவிட்டரில் அனல் பறக்கும் விவாதம்!

இதற்கு பதிலளித்த நடிகை காயத்ரி ரகுராம், “என்ன மிஸ்டர் திருமாவளவன், நீங்க வேல் குத்திருக்கீங்களா? இல்ல பால் காவடி எடுத்துறீங்களா?பெருசா பேச வந்துட்டீங்க… நீங்க திமுகவுக்கு கூஜா தூக்குறீங்க. கைநீட்டு காசு வாங்குறீங்க… அதுக்காக நீங்க சொல்றது எல்லாம் சரியாகிடுமா? என்று பதிலடி கொடுத்திருந்தார்.

தனது அழைப்புகளை  திருமாவுக்கு கால் டைவர்ட் செய்த காயத்ரி ரகுராம் : டிவிட்டரில் அனல் பறக்கும் விவாதம்!

இதை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்சென்னை கிழக்கு மாவட்ட அமைப்பாளர் வக்கீல் பன்னீர்செல்வம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காயத்ரி ரகுராமிற்கு எதிராக நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

https://twitter.com/gayathriraguram/status/1286880373138366464

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் தனது டிவிட்டர் பக்கத்தில், “எனது எல்லா அழைப்புகளையும் உங்களுக்கு  திருப்புகிறேன் திருமாவளவன். என்னை அச்சுறுத்தும் உங்கள் குண்டர்களுக்கு நீங்கள் பதிலளியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.