ஒரு பிராமணர் கூட…. விளாசும் திருமாவளவன்! பதிலடி கொடுக்கும் காயத்ரி ரகுராம்!! வைரலாகும் வீடியோ

 

ஒரு பிராமணர் கூட…. விளாசும் திருமாவளவன்! பதிலடி கொடுக்கும் காயத்ரி ரகுராம்!! வைரலாகும் வீடியோ

ஒரு பிராமணர் கூட…. விளாசும் திருமாவளவன்! பதிலடிக்கும் கொடுக்கும் காயத்ரி ரகுராம்!! வைரலாகும் வீடியோ

இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக அவதூறான வீடியோக்களை கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் வெளியிட்டு வருவதால், அந்த யூடியூப் சேனலை தடை செய்யவேண்டும் என்றும், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஒரு பிராமணர் கூட…. விளாசும் திருமாவளவன்! பதிலடி கொடுக்கும் காயத்ரி ரகுராம்!! வைரலாகும் வீடியோ

இந்நிலையில் திருமாவளவன் ஒரு வீடியோவில், “ஒரு பிராமணர் கூட பழனிக்கோ திருத்தணிக்கோ அலகு குத்தியோ, காவடி எடுத்தோ சென்றதுண்டா? இன்று ஹெச். ராஜா போன்றவர்களேல்லாம் முருகருக்காக வரிந்துக்கட்டி வருகிறார். யாரை ஏமாற்றுகிறார்கள். தமிழ் கடவுள் முருகரை பற்றி கவலைப்பட தமிழர்கள் வரட்டும். ஹெச். ராஜா வரக்கூடாது. திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக, உழைக்கும் மக்களை பிளவுபடுத்துவதற்காகவும், திமுக கூட்டணி கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுவதா? நாங்கள் கருப்பர் கூட்டம்தான், ஆனால் அந்த யூடியூப் சேனலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அநாகரீகமான அறுவருப்பான அரசியலை கைவிட வேண்டும். உங்களுக்கு முருகன் அருள்புரிவார் என்றால் பச்சை தமிழர்களான எங்களுக்கும் முருகர் துணை புரிய வரமாட்டாரா. ஒரு பிராமணர் கூட தங்களின் குழந்தைக்கு முருகன் என பெயர் வைத்தது இல்லை. முருகன் தமிழ்கடவுள் என்றால் விநாயர் தமிழ் கடவுள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவன் தமிழ்கடவுள் இல்லையா? முருகன் மட்டும் தமிழுக்கு கடவுளா? ஏன் சிவனை தமிழ் கடவுளை என சொல்வதில்லை” என ஆவேசமாக பேசியிருந்தார்.

இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள காய்த்ரி ரகுராம் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “என்ன மிஸ்டர் திருமாவளவன், நீங்க வேல் குத்திருக்கீங்களா? இல்ல பால் காவடி எடுத்துறீங்களா?பெருசா பேச வந்துட்டீங்க… நீங்க திமுகவுக்கு கூஜா தூக்குறீங்க. கைநீட்டு காசு வாங்குறீங்க… அதுக்காக நீங்க சொல்றது எல்லாம் சரியாகிடுமா? நாங்க குற்றச்சாட்டு வைக்கிறோம். நாங்க ஏன் உங்கள நம்பனும். சுரேந்திரர் மற்றும் நடராஜை பக்கத்தில் வைத்து போட்டோ எடுத்துறீங்க. அவங்க இரண்டு பேரும் திமுகவுக்கு பிரச்சாரம் பண்ணியிருக்காங்க. நாங்க என்ன இழிச்சவாய. பிராமணர்கள் சுப்ரமணியம் என பேர் வைக்கிறார்கள். நாங்க முருகர் பெயரை தான் வைத்துள்ளோம். நீங்க சாமி பெயரை வைத்திருக்கிங்களா? தமிழ்நாடு கலாச்சாரத்தையும், கடவுளையும் பேசுர எந்த தகுதியும் உங்களுக்கு இல்லை! இதோட எதுவும் பேசாதீங்க நாங்க சும்மா இருக்கமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.