சிறுமி வன்கொடுமை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை!

 

சிறுமி வன்கொடுமை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை!

கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த சத்யா என்கிற 15 வயது சிறுமி, கடந்த 2012ம் ஆண்டு ஜூன் 23ம் தேதியன்று பெரம்பலூர் முன்னாள் எம்.எல்.ஏ-வும் திமுக பிரமுகருமான ராஜ்குமாரின் வீட்டிற்கு, வீட்டு வேலை செய்வதற்காக வந்துள்ளார்.

வந்த இரண்டே நாட்களில், தான் கடுமையாக சித்ரவதை செய்யப்படுவதாக, கேரளாவில் இருந்த தன் தாய் சுசீலாவை தொடர்புகொண்டு சிறுமி தெரிவித்துள்ளார். அதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் பெரம்பலூருக்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் சிறுமி பாலியல் ரீதியாக சித்ரவதை செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமி வன்கொடுமை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை!

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 2012 ஜூலை 6ம் தேதி உயிரிழந்தார். சிறுமி கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்த நிலையில், ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெயசங்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சிறுமி வன்கொடுமை வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை!

அரசியல் பிரமுகர்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கும் அவரது நண்பர் ஜெயசங்கருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரம்பலூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.