சாத்தான்குளம் கொலை வழக்கு : மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி!

 

சாத்தான்குளம் கொலை வழக்கு : மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி, விசாரணையைக் கையிலெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணை செய்த போது, கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ.பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாத்தான்குளம் கொலை வழக்கு : மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி!

அதனைத்தொடர்ந்து சாத்தான்குள காவல் நிலையத்தில் பணியாற்றிய மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் காவலில் எடுத்து தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும் இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

சாத்தான்குளம் கொலை வழக்கு : மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதி!

இந்நிலையில் சாத்தான்குளம் கொலை வழக்கை விசாரித்து வரும்  2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் தற்போது மேலும் 2 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 10 சிபிஐ அதிகாரிகள் கடந்த 10 ஆம் தேதி டெல்லியிலிருந்து தமிழகம் வந்ததது கவனிக்கத்தக்கது.