கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை!

 

கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை!

திருவண்ணாமலை

செய்யாறு அருகே கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் நெல்வாய் பகுதியை சேர்ந்தவர் பாரதி. விவசாயி. இவர் குடும்ப செலவிற்காக பலரிடமும் கடன் பெற்றிருந்தார். ஆனால், கடனுக்கான வட்டியை சரிவர செலுத்தாததாக கூறப்படுகிறது. இதனால் பணம் கொடுத்தவர்கள் அதனை திருப்பி கேட்டு தொல்லை அளித்து வந்துள்ளனர்.

கடன் தொல்லையால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை!

இதனால், கடந்த சில நாட்களாக பாரதி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர், விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த பாரதியை உறவினர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து, புகாரின் பேரில் அனக்காவூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.