சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது !

 

சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது !

நாகர்கோவில் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அந்த சிறுமி தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவரை கண்டுபிடித்த போலீசார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது, சிறுமி அளித்த அதிர்ச்சிகரமான வாக்குமூலத்தில், “எனது தாய்க்கும் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனுடன் தொடர்பு இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு, என் அம்மாவுடன் முருகேசனைப் பார்க்கச் சென்றோம். அப்போது, அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதேபோல் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மேலும் சிலர் பாலியல் தொல்லை அளித்தார்கள். தாயின் தொடர் தொல்லையால் தான், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவானது” என்று கூறியுள்ளார்.

சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது !

இதன் காரணமாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவாகிய அவரை தீவிரமாக தேடி வந்தனர்.

சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது !

இந்நிலையில் தலைமறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனை நெல்லை மாவட்டம் உவரியில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் சிறுமியின் தாய் உள்பட 4 பேர் கைதான நிலையில் தற்போது நாஞ்சில் முருகேசனும் கைதாகியுள்ளார்.

சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் கைது !
முன்னதாக அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் நாஞ்சில் முருகேசன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.