பெண்ணுடன் உல்லாசம்… சிறுமிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் அதிமுக எம்எல்ஏவை தேடும் போலீஸ்!- 3 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த பகீர் தகவல்

 

பெண்ணுடன் உல்லாசம்… சிறுமிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் அதிமுக எம்எல்ஏவை தேடும் போலீஸ்!- 3 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த பகீர் தகவல்

நாகர்கோவில் பெண்ணிடம் உல்லாசமாக இருந்து வந்த முன்னாள் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், அந்த பெண்ணின் மகளுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்துள்ளார். சிறுமி அளித்த வாக்குமூலத்தால் 3 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியுள்ளார் நாஞ்சில் முருகேசன். அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்தவர் ஸ்டெல்லா ( 15). 4 நாட்களுக்கு முன்பு இவர் வீட்டிலிருந்து காணாமல் போனதாக கோட்டாறு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையில் நடத்தினர். அப்போது, நாகர்கோவிலைச் சேர்ந்த 20 வயது காதலனுடன் ஸ்டெல்லா திருமணம் செய்ய திட்டமிட்டு தலைமறைவானது தெரியவந்தது. காதலர்களை கண்டுபிடித்த காவல்துறையினர், வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பெண்ணுடன் உல்லாசம்… சிறுமிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் அதிமுக எம்எல்ஏவை தேடும் போலீஸ்!- 3 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த பகீர் தகவல்
இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சிறுமி ஸ்டெல்லாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமி அளித்த அதிர்ச்சிகரமான வாக்குமூலத்தில், ” எனது தாய்க்கும் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனுடன் தொடர்பு இருக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு, என் அம்மாவுடன் முருகேசனைப் பார்க்கச் சென்றோம். அப்போது, அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதேபோல் நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மேலும் சிலர் பாலியல் தொல்லை அளித்தார்கள். தாயின் தொடர் தொல்லையால் தான், காதலனுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவானது” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

பெண்ணுடன் உல்லாசம்… சிறுமிக்கு பாலியல் தொல்லை… முன்னாள் அதிமுக எம்எல்ஏவை தேடும் போலீஸ்!- 3 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த பகீர் தகவல்

இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குழந்தைகள் நல அதிகாரி, நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போக்ஸோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் நாஞ்சில் முருகேசன் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, சிறுமியின் தாய், ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேரைக் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள நாஞ்சில் முருகேசனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே, “கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நாஞ்சில் முருகேசன் நீக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக அறிவித்தனர்.