சென்னையில் நில அதிர்வு – மக்கள் அதிர்ச்சி!

 

சென்னையில் நில அதிர்வு – மக்கள் அதிர்ச்சி!

சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நில அதிர்வு – மக்கள் அதிர்ச்சி!

சென்னையில் இருந்து வடகிழக்கில் 320 கி.மீ தொலையில் வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் 10 கி.மீ ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நில அதிவு கண்காணிப்பு மையம் உறுதி செய்தது. சென்னை, ஆந்திரா அருகே வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் பகல் 12.35 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில நடுக்க ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் தாக்கத்தால் சென்னையின் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

சென்னையில் நில அதிர்வு – மக்கள் அதிர்ச்சி!

சென்னை நுங்கம்பாக்கம், கே,கே நகர், அம்பத்தூர், அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தால் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் கூடினர். இதனால் சென்னையில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.