திமுக இளைஞரணி நிர்வாகி படுகொலை – நெல்லையில் பயங்கரம்!

 

திமுக இளைஞரணி நிர்வாகி படுகொலை – நெல்லையில் பயங்கரம்!

நெல்லையில் திமுக இளைஞரணி நிர்வாகி படுகொலை செய்யபட்டதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை. இவர் அம்மாவட்டத்தின் திமுகவின் இளைஞரணி அமைப்பாளராக இருந்து வருகிறார்.நேற்று மாலை ஊருக்கு வெளிப்புறத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு தனது பைக்கில் செல்லதுரை சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த சிலர் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்லதுரையை அவ்வழியே சென்றவர்கள் உடனடியாக மீட்டு முக்கூடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது.

திமுக இளைஞரணி நிர்வாகி படுகொலை – நெல்லையில் பயங்கரம்!

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் செல்லதுரையின் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.செல்லதுரையின் மரணம் குறித்து அறிந்த திமுகவினரும், அவரது உறவினர்களும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திமுக இளைஞரணி நிர்வாகி படுகொலை – நெல்லையில் பயங்கரம்!

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அப்பகுதியில் நடந்த தேரோட்ட விழாவின்போது செல்லதுரைக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த முன் பகையால் செல்லதுரை கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள முக்கூடல் போலீசார், கொலை முன் விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது அரசியல் காரணங்களுக்காக நடந்த கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.