“ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்”

 

“ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்”

ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசும் அவர்களது அடிமைகளும் செய்யும் துரோகம்-புறக்கணிப்பு என்று உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று ஒரேநாளில் 10ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோல் 40ற்கும் மேற்பட்டோர் நேற்று ஒரேநாளில் கொரோனாவுக்கு பலியானார்கள். இந்த சூழலில் கொரோனா சிகிச்சையின் போது மூச்சுத்திணறலால் அவதிப்படும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களை மத்திய அரசு, தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் அனாதை மாநிலங்களுக்கு தாரைவார்த்துள்ளது. சென்னையில் தயாரிக்கப்பட்ட 45 மெட்ரிக் டன் ஆக்சிஜன் சென்னையிலிருந்து ஆந்திரா மற்றும் தெலங்கனாவிற்கு மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம்”

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்திலிருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா- தெலுங்கானாவுக்கு அனுப்பியுள்ளது மத்திய அரசு. இதுபற்றி எங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் வேறு கொடுக்கிறார். இவ்வளவு நாட்களாக இவர்களை ஆலோசித்து தான் எதையும் செய்தார்களா என்ன?

’மாநிலத்தில் அரசு என ஒன்று இருக்கிறது; அதனுடன் கலந்து பேசி முடிவுகளை எடுக்க வேண்டும்’ என்ற சிந்தனையே மத்திய அரசுக்கு இல்லாமல் போனதற்கு அடிமைகளின் கையாலாகாத்தனமே காரணம்.

ஊழல் வழக்குகளில் தப்பிப்பதற்காக ஆரம்பம் முதலே மாநில உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்ததன் விளைவே இது.அண்டை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ள போது,இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு தூக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு மத்திய அரசும் அவர்களது அடிமைகளும் செய்யும் துரோகம்-புறக்கணிப்பு” என்று பதிவிட்டுள்ளார்.