திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் உயிரிழப்பு… கோட்டாட்சியர் விசாரணை…

 

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் உயிரிழப்பு… கோட்டாட்சியர் விசாரணை…

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த மேட்டூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரது மகள் திலகவதி (25). இவருக்கு திருவண்ணாமலை தாமரை நகரை சேர்ந்த திருவருட்செல்வம் (30) என்பவருடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திலகாவுக்கு சிறுவயது முதலே காசநோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது.

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் உயிரிழப்பு… கோட்டாட்சியர் விசாரணை…

இதற்காக அவர் தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த திலகவதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, புகாரின் பேரில் கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே திருமணமாகி 3 மாதத்தில் பெண் உயிரிழந்ததால், இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.