பெரம்பலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இளைஞர் பலி

 

பெரம்பலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இளைஞர் பலி

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், தொற்றுக்கு உள்ளான அவரது தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம் பில்லாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி மணிமேகலை. இவர்களது மகன் வினோத் குமார் (29). குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதியானது. இதனையடுத்து, மூவரும் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

பெரம்பலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இளைஞர் பலி

இந்த நிலையில், வினோத்குமாருக்கும், அவரது தந்தை முருகேசனுக்கு கருப்பு பூஞ்சை நோய் தொற்று அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதானல் அவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய்க்காக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று வினோத் உயிரிழந்தார். மேலும், அவரது தந்தை முருகேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலால் முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மட்டும் உயிரிழந்து வந்த நிலையில், 29 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரம்பலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பெரம்பலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.