மதுரையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் பெண் பலி!

 

மதுரையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் பெண் பலி!

மதுரை

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த தேனியை சேர்ந்த பெண் ஓருவர் நேற்று உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் ஜெயந்தி (38). கடந்த மாதம் 19ஆம் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 31ஆம் தேதி அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, உடலின் வலதுபுற பகுதிகள் செயல் இழந்தன. இதனையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

மதுரையில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் பெண் பலி!

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. அத்துடன், தொற்று மூளைக்கு பரவியதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று மாலை ஜெயந்தி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சர்க்கரை வியாதி மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஜெயந்திக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டதாக, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே, திண்டுக்கல்லை சேர்ந்த ஆண் ஒருவர், மதுரை அரசு மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி உயிரிழந்த நிலையில் நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்தார்.