சிறுமியின் பிறப்புறுப்பில் 30 காயங்கள் - உடல் முழுவதும் கீறல்
சாகும் அளவிற்கு மூன்று பேர் சேர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அச்சிறுமியின் பிறப்புறுப்பில் 30க்கும் மேற்பட்ட காயங்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். உடல் முழுவதும் கீறி காயங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அந்த கொடூரன்களில் இரண்டு பேர் சிறுவர்கள். இந்த கொடூரர்களுக்கு வாதாட எந்த வக்கீலும் வர மாட்டோம் என்று உறுதி அளித்திருக்கிறார்கள். ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.
அம்மாநிலத்தில் பண்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது மலைவாழ் சிறுமி கடந்த 23ஆம் தேதியன்று தோழிகளுடன் ஆடு மேய்க்க சென்றிருக்கிறார். அப்போது இயற்கை உபாதைக்காக மறைவான இடத்தைச் தேடி சென்ற போது அவர் திடீரென்று மாயமாகி இருக்கிறார். இதனால் சிறுமியுடன் வந்த தோழிகள் இருவரும் அவரை தேடி பார்த்துவிட்டு வீட்டிற்கு சென்று சிறுமியின் பெற்றோரிடம் விவரங்களை சொல்லியிருக்கிறார்கள்.
இதையடுத்து பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடிப் பார்த்திருக்கிறார்கள். கடைசியில் ரத்த வெள்ளத்தில் சடலமாகத் தான் மீட்க முடிந்திருக்கிறது. மகளை அந்த நிலைமையில் பார்த்த பெற்றோர் கதறி அழ, பெற்றோரின் நிலையை பார்த்து கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, போலீசார் விரைந்து வந்து சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
சிறுமியின் உடற்கூறு ஆய்வில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது குறித்து மாவட்ட போலீஸ் அதிகாரி, இப்படி ஒரு கொடுமையான சம்பவத்தை நான் சந்தித்தது இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.
அவர் மேலும், மூன்று பேர் சேர்ந்து அந்த சிறுமியை சிறுமியை வன்கொடுமை செய்து இருக்கிறார்கள். துப்பட்டாவால் கையை கட்டிவிட்டு துன்புறுத்தி இருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்க, அவர்களின் வன்புணர்ச்சிக்கு எதிர்த்துப் போராடி இருக்கிறார். அதனால் அச்சிறுமியின் பிறப்புறுப்பில் முப்பது முறைக்கு மேல் காயங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். உடல் முழுவதும் கீறி காயங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த கொடூரத்தால் அச்சிறுமி உயிரிழந்துவிட்டார். அதன் பின்னரும் விடாமல் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.
சம்பவம் தொடர்பாக மூன்று பேரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த மூவரில் இரண்டு பேர் சிறுவர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் வாதாட வரப்போவதில்லை என்று வழக்கறிஞர்கள் உறுதியளித்திருக்கிறார்கள்.