இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், இருவர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், இருவர் பலி!

திருப்பூர்

திருப்பூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

திருப்பூர் முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (40). இவர் அச்சகம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், அலுவலக பணி தொடர்பாக வேலுச்சாமி நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் திருப்பூருக்கு புறப்பட்டு சென்றார். அச்சகத்தில் பணிபுரியும் கருணாநிதி என்பவரும் அவருடன் சென்றார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், இருவர் பலி!

திருப்பூர் மங்கலம்ரோடு தாடிகாரமுக்கு அருகே சென்றபோது, கலவை எந்திரம் ஏற்றி வந்த லாரி ஒன்று, இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முயன்றது. அப்போது, இருசக்கர வாகனத்தின் மீது லாரி உரசியதில் இருவரும் வாகனத்துடன் சாலையில விழுந்தனர். அவர்களின் மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த திருப்பூர் மத்திய பகுதி போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநர் கார்த்திகேயன் என்பவரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.